ஒரு புத்த மதியம்
இன்றைய கவிதையிலிருந்து இந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றன. கவிதைகளில் புதிய வடிவங்களை பரிசோதனை செய்ய முன்வரும் ஒருவரின் முயற்சி. அலங்கார ஆடை ஆபரணங்களை கழற்றி விட்டு நளினமான ஒரு நடனம் புரியும் ஒரு நங்கையை போல் இவை நடந்து கொள்கின்றன. கவிதையின் வடிவம், அதன் சொல் அமைப்பு, ஒலி அமைப்பு ஆகியவற்றில் தனித்த அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் இது யாப்பிலக்கணக் கவிதை அல்ல. முழு சுதந்திரமான கவிதை. சிங்கப்பூரின் நிலவியலையும் பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியவை.
Oru Buddha Madhiyam
This poetry collection experiments with different forms and styles. It vividly exhibits the author's journey of self reflection through various subjects and objects in the Singapore landscape. These poems bring out different perspectives like a kaleidoscope. They were discussed and debated in gatherings in Singapore and in India.
பகுதி | Excerpt - "ஒரு புத்த மதியம்"
மர நிழல்களில் தள்ளித் தள்ளி அமர்ந்து
அமைதியாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்
முகக்கவசம் அகற்றிய
வேலைக்கார புத்தர்கள்.
இலக்குடனோ இலக்கில்லாமலோ
சாலைகளில் விரைந்துகொண்டிருந்தனர்
முகக்கவசம் அணிந்த
மத்தியதட்டு புத்தர்கள்.
குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைகளில்
விவாதித்துக் களைத்திருந்தனர்
ஒரு காதில் தொங்கிய முகக்கவசத்துடன்
பூர்ஷ்வா புத்தர்கள்.
வேறு இரு புத்தர்களின் வாகனங்கள்
சாலையில் மிக நெருக்கமாகச் சந்தித்துக்கொள்ள
அங்கே அமைதிக்கு சிறு பங்கம்.
பேருந்துகளில் உறங்கிக்கொண்டிருந்த
புத்தர்கள் சூனியத்துக்கு மிக அருகில் இருந்தனர்.
வாகன எண்களை அவசரமாகக் குறித்துக்கொண்டனர்
அவ்வழி சென்ற பற்பல 4D புத்தர்கள்.

ABOUT THE AUTHOR

மஹேஷ் குமார்
தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள், சிறுகதைகள் எழுதி வெளியிட்டிருக்கிறார். கவிதை, கதை, கட்டுரைகளை மொழிபெயர்ப்பும் செய்துவருகிறார். சிங்கப்பூரில் வெளிவரும் "தி சிராங்கூன் டைம்ஸ்" தமிழ் இலக்கிய மாத இதழின் தன்னார்வல ஆசிரியராக 2017 முதல் இருக்கிறார்.
Mahesh Kumar
Mahesh Kumar has written and published poems and short stories in Tamil and English. He translates poetry, stories and articles. Since 2017, he has been a volunteer editor of The Serangoon Times, a Tamil literary monthly published in Singapore.
சிறு குறிப்புகள் மஹேஷ் குமார் | Short Notes with Mahesh Kumar
"மனக்கண் வழியே" என்பதற்கு எழுத்தில் உங்கள் அர்த்தம் என்ன?
What does "Mata Hati | 心眼 | Eye of the Heart | மனக்கண் வழியே" mean to you in writing?
உட்பொருளை வெளிப்படுத்துதல்
Seeing through and interpreting
உங்கள் எழுத்து செயல்முறை எப்படி இருக்கும்? நீங்கள் தட்டச்சு செய்கிறீர்களா அல்லது எழுதுகிறீர்களா? பல வரைவுகள், நீண்ட இடைநிறுத்தங்கள் அல்லது திடீர் செயல்பாட்டு வெடிப்புகள் உள்ளனவா?
What does your writing process look like? Do you type or write? Are there multiple drafts, long pauses, or sudden bursts of activity?
எப்போதுமே தட்டச்சு செய்வதால் இவை எல்லாமே மின்னிலக்கப் பிறப்புகளே. சில சமயங்களில் பலமுறை திருத்தப்படும். பல சமயங்களில் தன்னெழுச்சியாக வெளிப்படும்.
I always type. So it is always digital native. Sometimes it is multiple drafts and sometimes it is very spontaneous.
உங்கள் வேலை செய்யும் இடம் எப்படி இருக்கும்?
What does your working space look like?
மிக ஒழுங்கான அமைப்புமல்லாத மிக ஒழுங்கற்ற அமைப்புமல்லாத இடைநிலை.
Neither well-organised nor too cluttered.
தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் நூலிற்கு 30 வார்த்தைகள் அல்லது அதற்கும் குறைவான வார்த்தைகளில் ஒரு சுருக்கமான உரை உருவாக்கவும்.
Make an elevator pitch for your shortlisted work in 30 words or less.
புறத்தில் காண்பதை வாசகனின் அகத்தில் சரியான பிம்பமாகக் கடத்தும் முயற்சியில் ஓரளவு வெற்றிபெற்றதாகவே கருதுகிறேன்.
My attempt to reflect the externals within the mind of the reader and project a closer-to-true image has been mostly successful.
இந்தப் படைப்பை எழுதும்போது ஒரு முக்கியமான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
Could you share a pivotal moment as you were writing this work?
கவிதைள் எப்போதுமே என்னை உள்நோக்கிப் பயணிக்க வைப்பவை. இந்தத் தொகுப்பை எழுதும்போது கடந்து செல்லும் ஒவ்வொரு மூலையிலும் புத்தர் என்னைப் பார்த்து முறுவலிப்பதாகவே தோன்றியது.
For me, writing poems always makes me look more inward. While compiling this anthology, I found Buddha smiling from every corner.
இந்தப் புத்தகத்தை எழுதும்போது உங்களுக்கு நீங்களே ஒரு அறிவுரை கூற விரும்பினால், அது என்னவாக இருக்கும்?
If you could give one advice to yourself when you were writing this book, what would it be?
கவிதையில் எப்போதும் ஒரு உள்முக அனுபவம் ஏற்படுமானால் சிறப்பு.
When it comes to poetry, the inner experience matters more than anything else.