வேர்களைத் தழுவும் விழுதுகள்
தமிழ்நாட்டிலுள்ளு ஒரு குக்கிராமத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஒரு மனிதனின் கதையை இந்த நூல் பேசுகிறது. இவனுக்கு முன்னால் மூன்று தலைமுறை எப்படியெல்லாம் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்கள் என்பதையும் விவரிக்கிறது. சிங்கப்பூருக்கு வந்த நான்காவது தலைமுறை மனிதன் ஏன் சிங்கப்பூர் வந்தான்? அவனைத் துரத்திய பிரச்சினைகள் என்னென்ன? எந்த ஏற்பாடும் செய்யாமலேயே 4 குழந்தைகளை வளர்த்து ஆளாக்க அவன் எவ்வளவு பாடுபடுகிறான்?
Verhalai Thazhuvum Vixhuthuhal
This is a story of a person who was born in a remote village in Tamil Nadu. The story also narrates the lives of three preceding generations. The protagonist is from the fourth generation. After his formal education, he migrates to Singapore because of various problems with his family and community. He came to Singapore without any living arrangements and faced difficulties in bringing up his four children. He eventually overcame all obstacles and became a grassroot leader and an award-winning writer.
பகுதி | Excerpt
அந்த நாளில் ரைஸ்மில், வீடு, ராவுத்தர் குளம், மேய்ச்சல் நிலம், ராபியத்நனிமா, பாப்பாத்தி கூட்டம் இருக்கும் வீடுகள் எல்லாம் அதிகாலையில் அமைதியாய் இருக்கும். ரைஸ்மில்லில் களம் அவியச்சட்டி, அடுப்பு, தொட்டிகள் எல்லாம் சுத்தமாக கழுவிவிடப்பட்டு இருக்கும். அடுப்பில் ஓர் ஆள் படுத்துத் தூங்கலாம். களத்தில் சிதறிக் கிடக்கும் நெல்லை சிட்டுக் குருவிகளும் மைனாக்களும் அவசரமின்றிப் பொறுக்கும். ரைஸ்மில்லின் சுற்றுச் சுவரில் ஏதோ யோசனையில் காகங்கள் அமர்ந்திருக்கும். வாகைமர உச்சிக் கிளையில் சில கிளிகள் கூப்பிடும். குளத்தில் ஆங்காங்கே மீன்கள் அமைதியாக தலையைக் காண்பித்துவிட்டு மறைந்துவிடும். மேய்ச்சல் நிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்கும். மாடுகளோடு சுப்பன் வருகிறானா என்று திரும்பித் திரும்பிப் பார்த்து ஏமாந்துபோகும். குளத்துக்கு குளிக்க வருபவர்கள் அதிகாலையே வந்து குளித்துவிட்டு சென்றுவிடுவார்கள். ரைஸ்மில்லில் எந்த வேலையும் இல்லாததால், ரைஸ்மில்லுக்குள் புகுந்து, குளத்துக்குப் போகும் பாதை வழியே வெளியேறி குளித்துவிட்டு மீதிச் சோப்பை கருவக்குச்சியில் சொருகிக் கொண்டு புறப்படுவார்கள். வாத்துகள் அவ்வப்போது ‘குவா குவா’ என்று ஏதோ முக்கியமாக சேதி சொல்வதுபோல் கத்தும். எட்டிப் பார்க்கும் மீன்கள் பயந்து விலகி நீந்தி மறைந்துவிடும்
ராவுத்தரம்மா அதிகாலையிலேயே வடிச்ச கஞத்சியில் நிறைய தவிட்டைப் போட்டு கெட்டியாகப் பிசைந்து பெரிய மண் களையங்களில் வைத்து கோழிகளையும் குஞ்சுகளையும் திறந்துவிடுவார். எல்லாக் கோழிகளும் குஞ்சுகளும் தவிட்டுக் கூழை கொத்திக்கொத்தி விழுங்கிவிட்டு வாசல் வழியே வெளியேறும். வண்டிப்பேட்டையை ஓட்டமும் நடையுமாகக் கடந்து களத்துக்கு சென்றுவிடும். ‘அன்று 27ஆம் கிழமை, ஆட்கள் யாரும் மில்லில் இருக்கமாட்டார்கள்’ என்ற சேதியை வடிச்சகதஞ்சியும் தவிடும் கோழிகளுக்கு சொல்லியிருக்கலாம். ஏதேனும் காகம் தாழப் பறந்தால் தாய்க்கோழி பறந்து விரட்டும். சில சுயநலக் கோழிகள் சிட்டுக்குருவிகள் நெல் பொறுக்குவதைச் சகிக்காமல் அவைகளைத் துரத்தும். குருவிகள் பறந்து விலகிச் சென்று வேறு இடத்தில் பொறுக்கும். எல்லாப் பெட்டைகளையும் பெண்டாள சேவல்கள் துரத்தும். சேவல்கள் சண்டைபோட்டு பிறகு கிடைத்ததை அனுபவித்து அமைதியாகிவிடும்.

ABOUT THE AUTHOR

யூசுப் ராவுத்தர் ரஜித்
யூசுப் ராவுத்தர் ரஜித் சொந்த ஊர் தமிழ்நாடு, அறந்தாங்கி. தனிநிலை ஆசிரியர். எழுத்தாளர், தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் என்ற அமைப்பை சிங்கப்பூரில் நிறுவி பல தமிழ் நிகழ்ச்சிகளைப் படைத்தவர். நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதைகள், படைத்துள்ளார்
Yousuf Rowther Rajid
Yousuf Rowther Rajid was born in Tamil Nadu. He is an independent educator, writer, and the founder of the Association of Singapore Tamil Writers. He has written more than 10 books across various genres (novels, short stories, and poetry).
சிறு குறிப்புகள் யூசுப் ராவுத்தர் ரஜித் | Short Notes with Yousuf Rowther Rajid
"மனக்கண் வழியே" என்பதற்கு எழுத்தில் உங்கள் அர்த்தம் என்ன?
What does "Mata Hati | 心眼 | Eye of the Heart | மனக்கண் வழியே" mean to you in writing?
கண்ணால் பார்ப்பதல்ல நான் எழுதுவது . என் உணர்வுகளின் வெளிப்பாடு.
What I write is not what I see, but it is instead, an expression of my feelings.
உங்கள் எழுத்து செயல்முறை எப்படி இருக்கும்? நீங்கள் தட்டச்சு செய்கிறீர்களா அல்லது எழுதுகிறீர்களா? பல வரைவுகள், நீண்ட இடைநிறுத்தங்கள் அல்லது திடீர் செயல்பாட்டு வெடிப்புகள் உள்ளனவா?
What does your writing process look like? Do you type or write? Are there multiple drafts, long pauses, or sudden bursts of activity?
முதலில் சில நாட்கள் எழுதாமலே சிந்திப்பேன். என் சிந்தனையில் ஒரு நிறைவு ஏற்பட்டதும் எழுதுவேன். எழுதுவதை பிறகு தட்டச்சு செய்வேன்.
For the first few days, I do not write, I just think. When my thoughts have finalised and concluded, I will write. After writing, I will then revise it.
உங்கள் வேலை செய்யும் இடம் எப்படி இருக்கும்?
What does your working space look like?
10x10 அறை. ஒரு கணினி மற்றும் தேவையான பொருள்களோடு எழுதுவதற்ககான ஒரு மேசை.
A 10x10 room. A computer to write and a table full of the materials I need.
தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் நூலிற்கு 30 வார்த்தைகள் அல்லது அதற்கும் குறைவான வார்த்தைகளில் ஒரு சுருக்கமான உரை உருவாக்கவும்.
Make an elevator pitch for your shortlisted work in 30 words or less.
வேர்களைத் தழுவும் விழுதுகள் என் மூத்த தலைமுறையின் இரத்தமும் வியர்வையும் பொன்மனமிருந்தால் புவி வசமாகும், 5 வயதில் சிங்கப்பூர் வந்துகுடும்பத்தையே தூக்கிநிறுத்தியவனின் கதை
The blood and sweat of our forefathers, victories and griefs of the present generation, when possessed with a heart of gold, can win the world. The story of one who at the age of 5, left his family to move to Singapore and brought his family to great successes.
இந்தப் படைப்பை எழுதும்போது ஒரு முக்கியமான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
Could you share a pivotal moment as you were writing this work?
என்னைப் பற்றிய தகவல்களும் என் தலைமுறை பற்றிய தகவல்களும் அழிந்துவிடக்கூடாது என்று நினைக்கிறேன். அது பயன்படுமா படாதா என்று எனக்குக் கவலையில்லை ஆனாலும் என்னை ஏதோ ஒரு விசை உலுக்கி எழுதச்சொல்கிறது.
Mine and my forefathers’ stories should not be lost or forgotten. I am not worried about whether it will be useful for the upcoming generations, but I am compelled by an unknown force to write this.
இந்தப் புத்தகத்தை எழுதும்போது உங்களுக்கு நீங்களே ஒரு அறிவுரை கூற விரும்பினால், அது என்னவாக இருக்கும்?
If you could give one advice to yourself when you were writing this book, what would it be?
மனதில் தீடீரென்று ஏதாவது தோன்றும். அதைப் பற்றி ஒன்றுமே தெரியாததுபோல் இருக்கும். அதையே சிந்திக்க சிந்திக்க அதிலிருந்து பல தகவல்கள் வந்துகொண்டே இருக்கும்.
An idea will suddenly strike you and when you first think about it, you will not have much to learn. However, if you dig deeper and persist thinking about it, you can gain a lot of insight.