பொன்மனமிருந்தால் புவி வசமாகும்
இந்த நூல் 5 வயதில் சிங்கப்பூர் வந்தவனின் கதையைச் சொல்கிறது. வாழ்க்கையில் அவன் அனுபவித்த மேடுபள்ளங்கள் அனைத்தையும் வெற்றியுடன் சந்தித்து, ஒரு சிறந்த தொழிலதிபராக, கொடையாளராக, தமிழ்ச் சமுதாயம் போற்றும் தனிப்பெரும் மனிதனாக வளர்ந்த கதையைச் சொல்கிறது. தமிழ்நாட்டில் இந்து சமயத்திலிருக்கும் ஒரு பிரிவின் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களையும் இந்த நூல் பேசுகிறது. இந்த நூலின் நோக்கம். வாழ்க்கையில் பல சுமைகளை சந்திப்பவர்களுக்கு ஒரு தன்முனைப்பாக நிச்சயம் பயன்படும் என்பதே ஆகும்.
Ponmanamirundhaal Puvi Vasamaahum
A boy comes to Singapore from India at the age of five. The novel tells the tale of his encounters and challenges in life, and how he eventually achieved success with determination, becoming a prominent professional and community leader who uplifts the Tamil community. The book also explores the lifestyle and cultural practices of a segment of society in Tamil Nadu during the Hindu era.
பகுதி | Excerpt
அம்மையப்பன், விசாலாட்சியுடன் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். எத்தனையோ குடும்பங்களை உருவாக்கிவிட்டு, தனக்கென ஒரு குடும்பத்தோடு சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார். அக்காள், தம்பி, தங்கை அத்துனை பேருடைய வாழ்க்கையையும் நிர்ணயித்துவிட்டு வந்திருக்கிறார். தனக்கென ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார். தந்தையால் ஆளாக்கப்பட்டு, தந்தையால் பெண்பார்க்கப்பட்டு, தந்தை அமைத்துக்கொடுத்த வாழ்க்கை என்றிருந்த நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாய், தானே தந்தையின் கடமையைச் செய்து, தந்தைக்கும் உதவியாய் இருந்து, தனக்கென ஒரு வாழ்க்கையோடு சிங்கப்பூர் வந்திருக்கிறார்.
ஒரு வகையில் தன் தந்தை முத்தையா செட்டியாருக்கு, நன்றிக்கடன் பட்டிருக்கிறார். பாவம் அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. குதிரைப் பந்தயத்தைத் தவிர. ஆனால், அது ஒன்றே போதும் வாழ்க்கை சிரழிய என்பதற்கு நடைமுறை உதாரணமாகிவிட்டதால், இத்தனை ஆண்டுகாலம் சிங்கப்பூரில் இருந்தும், எத்தனையோ வேலைகள் செய்தும், எத்தனையோ விதமான கூட்டாளிகளோடு வாழ்ந்திருந்தும், அம்மையப்பனுக்கு, புகை, மது, சூதாட்டம் என்ற எந்த கெட்ட பழக்கமும் ஏற்படவில்லை. அதற்கு அவர் தந்தை மிகப் பெரிய காரணமாய் இருந்திருக்கிறார். அதற்காகத்தான் அவருக்கு மிக நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.
நாகராஜன் செட்டியாருக்கு, சுவீகாரப் புத்திரனாக, ராஜன் செட்டியாரின் மருமகனாக, விசாலாட்சியில் கணவராக, பாக்யா, விஜயா, ஹரிதாஸ் என்ற மூன்று பிள்ளைகளின் தகப்பனாக, ஏகப்பட்ட பொறுப்புகளுடன் சிங்கப்பூர் வந்திருக்கிறார். பெலிலோஸ் சாலையில் ஏற்கனவே முன்பணம் கொடுக்கப்பட்ட வீட்டுக்கு, நேராக அம்மையப்பன் வந்துவிட்டார். கடையின் புதுப்பிப்புப் பணிகள் முற்றிலும் முடிந்திருந்தன. அந்தக் கடையை அன்று மாலையே விசாலாட்சியோடு சென்று பார்வையிட்டார். பத்தர்கள் இருவரிலும், காத்தமுத்துதான் முக்கியமானவர். பலரும் வந்து விசாரிப்பதாகவும், சீக்கிரமே கடையைத் திறப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டுமென்றும், அதனால் தங்களுக்கும் வேலைகள் கிடைக்குமென்றும் அவர் கூறினார். கடை அந்தப் பத்தர்கள் பெயரில் இருந்தாலும், முழுக்கடைக்கும் வாடகை எல்லாம் முடிவாகி, அந்த நாள்வரை எந்த வாடகை பாக்கியும் இல்லை. அதனால் அவர்கள் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள்.
Tamil Pattimandra Kalai Kazhagam (Singapore), 2022
ABOUT THE AUTHOR
யூசுப் ராவுத்தர் ரஜித்
யூசுப் ராவுத்தர் ரஜித் சொந்த ஊர் தமிழ்நாடு, அறந்தாங்கி. தனிநிலை ஆசிரியர். எழுத்தாளர், தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் என்ற அமைப்பை சிங்கப்பூரில் நிறுவி பல தமிழ் நிகழ்ச்சிகளைப் படைத்தவர். நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதைகள், படைத்துள்ளார்
Yousuf Rowther Rajid
Yousuf Rowther Rajid was born in Tamil Nadu. He is an independent educator, writer, and the founder of the Association of Singapore Tamil Writers. He has written more than 10 books across various genres (novels, short stories, and poetry).
சிறு குறிப்புகள் யூசுப் ராவுத்தர் ரஜித் | Short Notes with Yousuf Rowther Rajid
"மனக்கண் வழியே" என்பதற்கு எழுத்தில் உங்கள் அர்த்தம் என்ன?
What does "Mata Hati | 心眼 | Eye of the Heart | மனக்கண் வழியே" mean to you in writing?
கண்ணால் பார்ப்பதல்ல நான் எழுதுவது . என் உணர்வுகளின் வெளிப்பாடு.
What I write is not what I see, but it is instead, an expression of my feelings.
உங்கள் எழுத்து செயல்முறை எப்படி இருக்கும்? நீங்கள் தட்டச்சு செய்கிறீர்களா அல்லது எழுதுகிறீர்களா? பல வரைவுகள், நீண்ட இடைநிறுத்தங்கள் அல்லது திடீர் செயல்பாட்டு வெடிப்புகள் உள்ளனவா?
What does your writing process look like? Do you type or write? Are there multiple drafts, long pauses, or sudden bursts of activity?
முதலில் சில நாட்கள் எழுதாமலே சிந்திப்பேன். என் சிந்தனையில் ஒரு நிறைவு ஏற்பட்டதும் எழுதுவேன். எழுதிய பிறகு தட்டச்சு செய்வேன்.
For the first few days, I do not write, I just think. When my thoughts have finalised and concluded, I will write. After writing, I will then revise it.
உங்கள் வேலை செய்யும் இடம் எப்படி இருக்கும்?
What does your working space look like?
10x10 அறை. ஒரு கணினி மற்றும் தேவையான பொருள்களோடு எழுதுவதற்ககான ஒரு மேசை.
A 10x10 room. A computer to write and a table full of the materials I need.
இந்தப் படைப்பை எழுதும்போது ஒரு முக்கியமான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
Could you share a pivotal moment as you were writing this work?
என்னைப் பற்றிய தகவல்களும் என் தலைமுறை பற்றிய தகவல்களும் அழிந்துவிடக்கூடாது என்று நினைக்கிறேன். அது பயன்படுமா படாதா என்று எனக்குக் கவலையில்லை ஆனாலும் என்னை ஏதோ ஒரு விசை உலுக்கி எழுதச்சொல்கிறது.
Mine and my forefathers’ stories should not be lost or forgotten. I am not worried about whether it will be useful for the upcoming generations, but I am compelled by an unknown force to write this.
இந்தப் புத்தகத்தை எழுதும்போது உங்களுக்கு நீங்களே ஒரு அறிவுரை கூற விரும்பினால், அது என்னவாக இருக்கும்?
If you could give one advice to yourself when you were writing this book, what would it be?
மனதில் தீடீரென்று ஏதாவது தோன்றும். அதைப் பற்றி ஒன்றுமே தெரியாததுபோல் இருக்கும். அதையே சிந்திக்க சிந்திக்க அதிலிருந்து பல தகவல்கள் வந்துகொண்டே இருக்கும்.
An idea will suddenly strike you and when you first think about it, you will not have much to learn. However, if you dig deeper and persist thinking about it, you can gain a lot of insight.

