பன்மொழித் தமிழன் முத்தழகு மெய்யப்பன்
இந்த நூல் ‘பன்மொழித் தமிழன் முத்தழகு மெய்யப்பன்’ கடந்த கால அனுபவங்களை அடிப்படையாக வைத்து, பொது சேவைக்கு அர்ப்பணிப்பு செய்த ஒரு சிங்கைக் குடிமகனின் நன்கு வாழ்ந்த வாழ்க்கையின் சாரத்தை படம்பிடிக்கும் ஒரு எழுச்சியூட்டும் நினைவுக் குறிப்பாகும். வாழ்க்கையில் சமூகத் தொண்டு, மொழித் தொண்டு, சமூக நல்லினக்கத் தொண்டு, நாட்டின் பொருளாதாரம் உயரத் தொண்டு போன்றவை வெளிப்படுத்தும் ஒரு ஊக்குவிப்பு நூலாகும்.
நூலாசிரியர்: முத்தழகு மெய்யப்பன்
இணை ஆசிரியர்: இரா அருள்ராஜ்
Living Legacy: A Chronicle of Purpose
Living Legacy: A Chronicle of Purpose is an inspiring memoir capturing the essence of a life well-lived, grounded in past experiences and dedicated to public service. The author, motivated by a desire to be remembered as a person loved in life and unforgettable in death, presents a collection of wisdom and experiences. Beyond literary pursuits, the author's life emerges as a tapestry of charity and societal contributions, notably as a Lions Club member and active participant in various organisations, significantly impacting the country's economy and tourism. The memoir also delves into the author's passion for languages, showcasing his commitment to teaching and learning, contributing not only to personal growth but also to societal betterment. Living Legacy stands not just as a memoir but as a testament to a life dedicated to service, language, and societal harmony.
Author: Muthalagu Meyyappan
Co-author: R Arulraj
பகுதி | Excerpt - "பன்மொழித் தமிழன் முத்தழகு மெய்யப்பன்"
பின்புலம் எதுவும் இன்றி உறுதியான நம்பிக்கையையும் உழைப்பையும் மட்டும் மனத்தில் கொண்டு காரைக்குடியிலிருந்து புறப்பட்டு சென்னை, புதுடில்லி, கத்தார் என்று பணியாற்றிவிட்டு அமெரிக்கா செல்லும் வழியில் சிங்கப்பூரில் கிடைத்த வேலை வாய்ப்பைப் பற்றிக் கொண்டு குடியுரிமை பெற்றேன்.
என் முன்னேற்றத்திற்கும் சாதனைகளுக்கும் முக்கிய மூல காரணங்கள் - கடுமையான உழைப்பு மேலும் மேலும் படித்த படிப்புகள், மொழிகள், பயிற்சிகள் மற்றும் வெற்றி நிச்சயமென்ற திடமான நம்பிக்கையுடன் சோர்வின்றிச் செயல்பட்டதே ஆகும்.
சிறுவயதிலிருந்தே நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்ததால் எனக்கு மிக அருமையான நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களின் உதவியால் பல நன்மைகளை அடைந்தேன்.
படிப்பில் ஆர்வம் இருப்பினும் மேல்படிப்பு படிக்க குடும்ப சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை. வேலையிலும் சிறியது பெரியது என்று இல்லாமல் கிடைத்த வேலையை உழைப்பின் துணை கொண்டு செய்ய விழைந்தேன். மண்வெட்டும் வேலைதான் ஆரம்பம்.
வாழ்வில் உயர்ந்திட உழைப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நம் தகுதியை வளர்த்துக் கொள்வதும் முக்கியம். என் அடுத்தக்கட்ட நகர்விற்குச் சென்னையில் தட்டெழுத்து , சுருக்கெழுத்து பயின்றேன். ஜப்பானிய மொழியில் தேர்ச்சிப் பெற்றேன். புதுடில்லி அப்புறம் கத்தாரில் வேலை.
“ஏணியைக் கூரை மீது போடாதீர்கள் வானத்தின் மீது போடுங்கள்” என்று சொல்வார்கள். அப்படி அன்று என் அடுத்த இலக்கு அமெரிக்கா போக வேண்டும் என்பது. சிங்கப்பூரின் வழியாக அமெரிக்கா போகும் பயணத்தைத் தொடங்கினேன். திட்டம் தடம் மாறி, படித்து வைத்திருந்த ஜப்பானிய மொழியால் என் பயணம் என்னை சிங்கப்பூரிலே குடியுரிமையுடன் இருக்க செய்து விட்டது.
வாழ்வில் சாதனைகள் புரிய, பிறரிடம் நம் காரியம் பலிக்க முக்கியமான ஒரு விஷயம் நம் அனுகுமுறை. பகை சாதிக்காததை நகை சாதிக்கும். சிரித்த முகத்துடன் பேசி தாய்மொழி தமிழ் சம்பந்தப்பட்ட பல முன்னேற்றங்களை சிங்கப்பூரில் செய்திருக்கிறேன். தமிழ் பிழை கண்ட இடங்களில் எல்லாம் சரிசெய்ய காரணமாய் இருந்துள்ளேன்.
சிங்கப்பூர் விமானத் தளத்தில் அறிவிப்புப் பலகைகளில் தமிழை இடம் பெறச் செய்தேன். சிங்கப்பூரில் ஜப்பானிய பேச்சுப் போட்டியில் வென்று நானும் என் மகளும் புகழடைந்தோம்.
சிங்கை முழுவதும் விரைவு வண்டி நிலையங்கள் அனைத்திலும் தூய்மைப் பணி செய்துள்ளேன் செய்கிறேன். சிங்கைக்கு நன்றியுடன் உள்ளேன் என்பதை உறுதி செய்து கொண்டுள்ளேன்.
ஒன்பது முக்கிய ஆசிய மொழி அடங்கிய உடனடி தமிழ் மொழிபெயர்ப்பு சாதனத்தில் தமிழை பத்தாவது மொழியாக இணைக்க ஐந்தாண்டு கால முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன்.
இன நல்லிணத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சிங்கையின் நான்கு ஆட்சி மொழிகளிலும் ஔவையின் ஆத்திசூடியை புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன்.
தாய்மொழி தமிழுக்கும் சிங்கை சமுதாயத்திற்கும் பல நற்சேவைகள் செய்து, பல விருதுகளைப் பெற்று இருக்கிறேன்.
விஞ்ஞானம் தொழில்நுட்பத்திற்கான 2013 ஆம் ஆண்டு விருது.
2017 திருவள்ளுவர் விருது பேராசிரியர் அறவாணர் விருது
சிங்கை தமிழ்மொழி காவலர் விருது; அரிமா சங்க உறுப்பியம்;
அடித்தளப் பணியாளன்
சாதனைக்கு எதுவும் தடையில்லை. விடா முயற்சி, உழைப்பு, மன உறுதியும் உண்மையும் என்பதை என் நூல் “பன்மொழித் தமிழன் முத்தழகு மெய்யப்பன்”-இல் பதிய வைத்திருக்கிறேன்.
‘சோம்பேறிகள் சாதனை படைத்ததாகச் சரித்திரம் இல்லை’
என்னும் கூற்று என்றும் என் மனதில்.

ABOUT THE AUTHORS

முத்தழகு மெய்யப்பன்
முத்தழகு மெய்யப்பன், ஒரு பன்மொழி தமிழன். சிங்கப்பூரில் "மேயர் மல்டி சர்வீஸ்" நிறுவனர். ஜப்பானிய மொழியில் நிபுணத்துவம் பெற்ற அவர், சமூக நல ஈடுபாட்டில் உள்ளவர். சுற்றுலாவில் மொழித் திறனைப் பயன்படுத்தி சிங்கப்பூர் பொருளாதார உயர உறுதுனையாக இருப்பவர். சிங்கைத் தமிழ்க் காவலன் என்ற விருது பெற்றவர். தமிழ் மொழிக்காகவும் இன நல்லிணக்கத்திற்காகவும் பல சேவைகள் செய்தவர்.
Muthalagu Meyyappan
Muthalagu Meyyappan is a multilingual Tamilian. Proficient in Japanese, he won the Japanese Association Speech Competition and leverages language skills for community engagement. He is committed to philanthropy in support of the Tamil language and community welfare.

இரா. அருள்ராஜ்
அன்புத் தம்பி ராஜ் என்கிற முனைவர் இரா. அருள்ராஜ் அவர்கள் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், இராமையன்பாளையத்தில் பிறந்தவர், தற்போது புதுச்சேரியில் வசித்து வருபவர். அவர் வேதியியல் துறையில் அறிவியல் நிறைஞர் (M.Sc.,) மெய்ப்பொருளியல் நிறைஞர் (M.Phil.) மற்றும் ஆய்வியல் அறிஞர் (முனைவர் பட்டம்) (Ph.D.) போன்ற பட்டங்களைப் பெற்றவர். இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் மேலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் (NUS, SINGAPORE) இரண்டரை ஆண்டுகள் முனைவர் பட்டத்திற்குப் பிறகான ஆராய்ச்சிப் பணியில் (RESEARCH FELLOW) இருந்தவர்.
R. Arulraj
Dr. R. Arulraj holds Master of Science (M.Sc.), Master of Science (M.Phil.), and Doctorate (Ph.D.) degrees in chemistry. He also has a Master's degree (M.A.) in Tamil. He is a scientist and writer. He worked as a manager in multinational pharmaceutical companies and was a research fellow at the National University of Singapore.
சிறு குறிப்புகள் முத்தழகு மெய்யப்பன் | Short Notes with Muthalagu Meyyappan
"மனக்கண் வழியே" என்பதற்கு எழுத்தில் உங்கள் அர்த்தம் என்ன?
What does "Mata Hati | 心眼 | Eye of the Heart | மனக்கண் வழியே" mean to you in writing?
மனக்கண் என்பது ஒருவரின் மனதில் தோன்றும் காட்சிகள், யோசனைகள் அல்லது கருத்துக்களைக் கற்பனை செய்து பார்க்கும் திறனைக் கொண்ட கண்ணாடி. எழுத விரும்புவோர் அனைவரும் மனக்கண்ணில் காட்சிகளை, நிகழ்வுகளைக் கற்பனை செய்துதான் எழுத முடியும். எனவே மனக்கண்ணால் பார்த்தல் மிகவும் இன்றியமையாதது.
Mata Hati, also known as Xinyan or the Eye of the Heart (மனக்கண் or Manakkan in Tamil), refers to the ability to visualise and imagine scenarios, ideas, or concepts in one's mind. In essence, it's a form of mental mapping. For storytellers and writers, Mata Hati is essential, as it enables them to clearly envision and organise their ideas before putting them into words, ensuring a cohesive and engaging narrative for themselves and their audience.
உங்கள் எழுத்து செயல்முறை எப்படி இருக்கும்? நீங்கள் தட்டச்சு செய்கிறீர்களா அல்லது எழுதுகிறீர்களா? பல வரைவுகள், நீண்ட இடைநிறுத்தங்கள் அல்லது திடீர் செயல்பாட்டு வெடிப்புகள் உள்ளனவா?
What does your writing process look like? Do you type or write? Are there multiple drafts, long pauses, or sudden bursts of activity?
எழுத்துப் பிழைகளைப் பற்றிக் கவலைப்படாமல், ஒரே இயக்கத்தில் கணினியில் என் எண்ணங்களை படமாகக் கருத்துகளாகப் பார்த்துக்கொண்டே தட்டச்சு செய்கிறேன். பிறகு மறுபார்வை மதிப்பாய்வு மூலம் நல்ல நடையில் தலைப்பு தலைப்பாகச் சேமித்துக் கொள்வேன்.
நான் முன்பதிவுக் குறிப்பு அல்லது நீண்ட இடைநிறுத்தங்களுடன் எழுதுவது இல்லை; அதற்குப் பதிலாக, உடனடி செயல்பாட்டில் இறங்கி மனதில் தோன்றுவதை சுதந்திரமாக தட்டச்சில்தான் பதிவு செய்கிறேன்.
My writing process involves typing directly into the system in one fluid motion, capturing my thoughts as they come, without worrying about spelling mistakes. Then, I review what I've typed to make cosmetic changes. I don't create drafts or take long pauses; instead, I work in sudden bursts of activity, freely writing whatever comes to mind.
உங்கள் வேலை செய்யும் இடம் எப்படி இருக்கும்?
What does your working space look like?
வீடமைப்பு கழக 5-அறை வீட்டில் ஒரு அறையில் எனது அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அறையை வேலை, வாசிப்பு, எழுதுதல் மற்றும் ஓய்வெடுப்பதற்கான பல்துறை இடமாகப் பயன்படுத்துகிறேன்.
தேவைப்படும்போது, எனது எழுத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் கூடுதல் குறிப்புகளைப் பெறுவதற்காகப் பொது நூலகத்திற்குச் செல்கிறேன்.
My home office, nestled in my 5-room HDB flat, is a versatile space for work, reading, writing, and relaxation. When needed, I visit the public library for extra reference materials to fuel my writing.
தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் நூலிற்கு 30 வார்த்தைகள் அல்லது அதற்கும் குறைவான வார்த்தைகளில் ஒரு சுருக்கமான உரை உருவாக்கவும்.
Make an elevator pitch for your shortlisted work in 30 words or less.
எனது நூல் தனி மனிதனை ஊக்குவிக்க வேண்டும்; சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளவனாக ஒருவன் இருக்க வேண்டும்; அனைவரும் அவனை ஒரு முன்மாதிரி எடுத்துக் காட்டாகக் கொள்ள வேண்டும்; என் நூலைப் படிப்பவர்களும் என்னைப் போல் உழைப்பால் உயர்வடைந்து சாதனையாளர்களாய் முன்னேற வேண்டும், எப்பொழுதும் விடாமுயற்சி, உழைப்பு, வெற்றியை அடைய உறுதியான நம்பிக்கை போன்ற நற்கொள்கைகளை மனத்தில் கொண்டு உழைத்து முன்னேற வேண்டும்.
My book, Panmozhith Thamizhan Muthalagu Meyyappan (Multi-language Tamil Lover Muthalagu Meyyappan) inspires individuals to become extraordinary and socially impactful. Its purpose is to foster role models, empowering readers to make a positive difference. The main emphasises are on Hard work, perseverance, determination which would surely lead to achieve the target.
இந்தப் படைப்பை எழுதும்போது ஒரு முக்கியமான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
Could you share a pivotal moment as you were writing this work?
'பன்மொழித் தமிழன் முத்தழகு மெய்யப்பன் என்ற எனது நூலை எழுதும் போது, குறிப்பாகத் தொடக்க கால நிகழ்வுகளை எழுதும்பொழுது என்னை நானே கடின உழைப்புகளால் துன்புறுத்தியுள்ளதை நினைவு கூர்ந்து என்மீது எனக்கே பரிதாப (பட்சாதாப) உணர்வு ஏற்பட்டது. தொண்டு மனப்பான்மை கொண்ட செயல்பாடுகளால் நற்பெயர் பெற்றதில் மகிழ்வடைந்தேன். எனது தாய்மொழியான தமிழின் வளர்ச்சிக்குப் பணியாற்றியது, சிங்கப்பூரின் இன நல்லிணம் ஆகியவற்றிற்கு ஆற்றிய சேவைகளை பங்களிப்புகளை எல்லோரிடமும் பகிர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கமாகக் கொண்டு எழுதினேன்.
என்னை ஒரு முன்மாதிரியாக மற்றவர்கள் கருத வேண்டுமென ஆசைப்பட்டேன். எனவே கடின உழைப்பு, விடா முயற்சி, இன நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை, மொழிப் பற்று ஆகியவற்றின் மதிப்புகளை ஊக்குவிக்க விரும்பினேன். சிங்கப்பூரில் உள்ள மாணவர்கள் என்னுடைய நூலை ஒருமுறை வாசித்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
While writing my book (Multilingual Tamilian Muthalagu Meyyappan), I aimed to share my stories of hard work, philanthropic attitude, contributions to the development of my mother tongue, Tamil, and the promotion of racial harmony in our multiracial society, Singapore.
I hoped that my book would serve as a useful resource and inspiration for all readers6. If you could give one advice to yourself when you were writing this book, what would it be?
Although writing a book is a lengthy and challenging process, it's an incredibly rewarding experience, knowing that I'm contributing something meaningful to Singapore's literary world. So, I encourage myself to keep writing and reading, persisting in this passion until my final days, leaving a lasting legacy in Singapore and the world of literature.
இந்தப் புத்தகத்தை எழுதும்போது உங்களுக்கு நீங்களே ஒரு அறிவுரை கூற விரும்பினால், அது என்னவாக இருக்கும்?
If you could give one advice to yourself when you were writing this book, what would it be?
ஒரு புத்தகத்தை எழுதுவது என்பது ஒரு நீண்ட மற்றும் சவாலான செயல் என்றாலும், சிங்கப்பூரின் இலக்கிய உலகிற்கு அர்த்தமுள்ள ஒன்றை நான் பங்களிக்கிறேன் என்பதை அறிந்தால், அது நம்பமுடியாத பலனளிக்கும் அனுபவம். எனவே, இலக்கிய உலகில் ஒரு நிலையான மரபை விட்டுவிட்டு, எனது இறுதி நாட்கள் வரை இந்த ஆர்வத்தில் தொடர்ந்து எழுதவும் படிக்கவும் என்னை நானே ஊக்குவிக்கிறேன்.
Although writing a book is a long and challenging process, knowing that I am contributing something meaningful to Singapore's literary world is an incredibly rewarding experience. So, I encourage myself to continue writing and reading in the same passion until my last days, leaving a lasting legacy in the world of literature.