முகிழ்
பதின்மூன்று சிறுகதைகளைக் கொண்ட முகிழ் எனும் நூலில் ஒவ்வொரு கதையும் வேறுபட்ட சிங்கப்பூர்ச் சூழலைக் கொண்டது. பால்ய நட்பின் ஆழத்தையும் பேரப்பிள்ளைகளுடன் வாழத் துடிக்கும் தாத்தாவின் ஏக்கத்தையும் கூறுவதைப்போலக் குழந்தைகளின் உளவியல் போராட்டங்களையும் தூய அன்பையும் நட்பையும் கதைகள் கூறுகின்றன. பறவைகளிடம் கால் நடைகளிடம் மனிதர்கள் காட்டும் பிரியத்தையும் கதைகளில் காணலாம். இப்படி தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் மனித உணர்வுகளையும் மனித நேயத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.
Mugizh
Mugizh is a compilation of 13 innovative short stories, covering different topics in Singapore. "Mandarin Orange" discusses the impact of a lost childhood friendship and "Thatha" (grandfather in Tamil) explores grandparents' yearning to live with their grandchildren. The work also explores varying themes such as children and their worldviews, navigating Alzheimer’s, the affection siblings share, and the love animals can show towards a human being. Mugizh strives to cover the broader concept of human connection and captures the marvel of everyday life and people. It weaves together tales of loss, love, hope, childlike wonder, and the spirit of Singapore.
பகுதி | Excerpt
எப்படியும் ஒரு சாப்பாட்டுக்கடை வைக்க வேண்டுமென்கிற கனவுடன் வந்திரங்கிய நடசேனுக்கு அடைக்கலம் கொடுத்த இடம் கிண்டா சாலை. அவரின் கனவு பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது.
தஞ்சாவூர் அரண்மனையில் மூன்று தலைமுறைகளுக்குச் சமையல்கார்களாக வேலை பார்த்த பரம்பரையைச் சேர்ந்தவர் என்கிற பெருமையுடன் வாழ்ந்தவர் நடேசன். “நம்ம ஊருலதான் பிழைக்க முடியல்ல.” மலேயாவுக்குச் (சிங்கப்பூர்) செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்ததும் குடும்பத்தை அங்கேயே விட்டுவிட்டுப் புறப்பட்டவர்.
சிங்கப்பூர் அவரை முகமன் காட்டி வரவேற்கவில்லை.
“கையில ஒரு மர அகப்பையைத் தூக்கிக்கிட்டு வந்துட்டா? கடை வைச்சுட முடியுமா?” “போப்பா…ஊருக்குப் போய் பிழைப்பைப் பார்!” “போ…போ.” போன்ற நம்பிக்கையற்ற மொழிகளைக் கேட்டுத் துவண்டுவிடவில்லை அவர்.
தலைக்குமேல் கூரையாக விரிந்த வானத்தின் வெளிச்சத்தில் எந்தத் திசை நோக்கி அடுத்த அடி எடுத்து வைப்பதென்று புரியாமல் கால் நடைகளோடு கால் நடையாகச் சிராங்கூன் சாலையைச் சுற்றிச் சுற்றி வந்தார். “பார்க்கவே பரிதாபமாக இருக்கியே” என்ற ஒருவர் கிண்டா சாலையில் பத்தோடு பதினொன்றாக இருக்க இடம் கொடுத்தார். அவர் கொடுத்த நம்பிக்கையில் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற ஓர் இடத்தைப் பசி மறந்து தேடியலைந்தார். “அங்கு ஓர் இடமிருக்குப் போய்ப் பாரு!” கணக்கில்லா மாதங்களின் தேடலுக்குப் பிறகு ஓர் ஆறுதலான தகவல் கிடைத்தது.
அந்தப் பத்துக்குப் பத்து இடத்தைப் பார்த்ததும் “இது போதுமே!!” என்கிற உற்சாகத்துடன் “உனக்கும் வேலை வந்துட்டு செல்லம்!! என்று மர அகப்பையை முத்தமிட்டார்.
“இப்போ முன் பணம். முதல் தேதி வாடகை சரியா வந்துடணும்!” என்று கறாராகச் சொன்னார் உரிமையாளர்.
ஒரே சொத்தான வெள்ளி அரைஞாண் கயிற்றை அவரிடமே விற்று மளமளவென்று வேலையில் இறங்கினார்.
ஒரு பெரிய தோசைக் கல். அதில் லாவகத்துடன் ஒரு துளி மாவு கூடக் கீழே சிந்தாமல் தோசை வார்ப்பதை ஆச்சரியத்துடன் காண்பர்.
“நம்ம வீட்டுப் பெண்களுக்குக்கூட இப்படித் தோசை சுடத் தெரியுமான்னு தெரியல” குடும்பங்களை ஊரில் விட்டுவிட்டு தனியாட்களாக வாழ்ந்தவர்களுக்கு நடேசன் சுடும் தோசை ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.
நாள்தோறும் பரபரப்பாக நடக்கும் வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இடத்தின் உரிமையாளரின் கண்கள் பெரிதாகின. “அடுத்த மாதத்திலிருந்து…!” என்று வாடகையை உயர்த்தினார். “சார்……இப்பத்தான் தொழில் கொஞ்சம் சூடு பிடித்திருக்கிறது. இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு..” “அதெல்லாம் முடியாது. ஒரு மாசத்துக்கு அப்புறம் புது வாடகைதான்.”
“இப்பவும் மனைவியையும், பையனையும் வரவழைக்க முடியாதுபோல் இருக்கே” ஆறாண்டு பிரிவுக்குப் பிறகு குடும்பத்தை இங்கு வரவழைப்பதற்காகச் செய்திருந்த ஏற்பாடுகளைத் தள்ளி வைத்தார்.
நடேசன் தங்கியிருந்த கிண்டா சாலைக்கு அருகாமையில் சுமார் பத்திலிருந்து பதினைந்துப் பேர் வரை அமர்ந்து சாப்பிடக்கூடிய ஒரு சின்னக் கடையைச் சென்று பார்த்தார். இருட்டில் மூழ்கிக் கிடந்த இடமாக இருந்தாலும் பார்த்ததும் பிடித்திருந்தது. “இதற்கு மேல் குறைக்க முடியாது. யோசிச்சுட்டுச் சொல்லுங்க” என்றார் கடையை வாடகைக்குக் கொடுப்பவர்.
தற்போது கொடுக்கும் வாடகையை விட சற்று அதிகமாக இருந்தது. எப்படியும் சமாளித்து விடலாமென்று பத்துக்குப் பத்து இடத்தைக் காலி செய்தார்.
சிராங்கூன் சாலையிலிருந்து சற்று தள்ளியிருக்கும் இடத்தில் கடை வைத்ததால் ஆட்கள் அவ்வளவு தூரம் தேடிக்கொண்டு வருவார்களா? என்கிற சந்தேகம் மனதைக் கிளறியது. “உங்கக் கடை காப்பியைக் குடிக்கும்போது தூரத்தை நினைக்க முடியல்ல” வாடிக்கையாளர்களின் பிரியமான வார்த்தைகளால் சிற்றுண்டியோடு மதிய நேர உணவையும் சமைக்க ஆரம்பித்தார்.
பாத்திரங்களைக் கழுவிப் போடுவதற்கு ஒருவர் இருப்பதைப்போல மற்ற வேலைகளுக்கு உதவியாக இன்னொருவரையும் சேர்த்துக்கொண்டார்.
முப்பது பேருக்கு என்னன்ன சமைக்கலாம் என்று ஒரு அட்டவணையில் எழுதினார். ஏழு நாட்களும், ஏழு விதமான சாம்பார்.
கிடைப்பது எந்தக் காயாக இருந்தாலும், அதை போட்டு “ஸ்பெஷல்’ சாம்பார் என்று அசத்தினார். அதோடு கூட்டு, துவையல், அப்பளம், தயிரும் தயாரானது. தண்ணீரில் தாளித்துக்கொட்டிய ரசம்கூடப் பாசிர் பாஞ்சாங், ஜீரோங் என்று நான்கு திசை மக்களின் நாசியைத் தீண்டியது.
ஒரு நாள் பத்துக்குப் பத்து இட உரிமையாளரும் வந்து காப்பி, மெது வடை சாப்பிட்டு விட்டு “எல்லாம் அருமை’ என்று கையில் ஒரு சிவப்புக் கவரை கொடுத்துச் சென்றார். சீனர்களின் இரட்டைப் படை எண்களின் நம்பிக்கைபடி சிவப்புக் கவரில் இருந்த நான்கு வெள்ளிகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார் நடேசன்.

ABOUT THE AUTHOR

மலையரசி சீனிவாசன்
சிங்கப்பூரில் பிறந்தவர். எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் எழுதத் தொடங்கினார். முகிழ் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பாகும். சிங்கப்பூர்ச் சூழலில் வெவ்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய கதைகளின் தொகுப்பாக முகிழ் இருக்க வேண்டும் என்று விரும்பினார். சந்தித்த மனிதர்களை எழுதுவது இவரது விருப்பம். கதைகளின் வழி பலதரப்பட்ட மனித உணர்வுகளோடு சிங்கப்பூரில் நிகழ்ந்த பல சுவாரசியமான சம்பவங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் சேர்த்து இலக்கியம் படைக்க முடியும் என்பது அவரது எண்ணம். மனிதநேயத்தையும் மனத்தின் ஆழத்தையும் எழுதுவதன் மூலம் அவர் தனது எழுத்துப் பயணத்தைத் தொடர விரும்புகிறார்.சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலவையில் நீண்ட காலமாக இருந்து வருகிறார். கணவர் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
Malaiarasi Srinivasan
Malaiarasi Srinivasan is a tamil writer who was greatly inspired by her father to write. As an author it is important for her to showcase diversity in storytelling and encapsulate the Singaporean spirit. Malaiarasi would like to continue exploring the depth of human connection, humanity, and capture the nostalgia of growing up in Singapore. She resides with her husband and daughter.
சிறு குறிப்புகள் மலையரசி சீனிவாசன் | Short Notes with Malaiarasi Srinivasan
"மனக்கண் வழியே" என்பதற்கு எழுத்தில் உங்கள் அர்த்தம் என்ன?
What does "Mata Hati | 心眼 | Eye of the Heart | மனக்கண் வழியே" mean to you in writing?
ஒரு நபருக்கு இருக்கக் கூடிய மிக முக்கியமான பண்பும் குணமும் பச்சாதாபமும் அனுதாபமும் என்று நினைக்கிறேன். நீங்கள் மற்றொரு நபர், விலங்கு அல்லது உங்களைப் பற்றிய புரிதலையும் அனுதாபத்தையும் காட்டும்போது, இரக்கம், மகிழ்ச்சி, சமூகம் போன்ற பல பண்புகளும் பிரகாசமாக பிரகாசிக்கின்றன. இதயத்தின் மூலம் நாம் உலகை வழிநடத்துகிறோம், மேலும் எழுதும்போது இதை மையக் கருப்பொருளாக/கருத்தாக எழுத விரும்புகிறேன்.
At the core of our existence, I think empathy and sympathy is the most important thing a person can have. When you showcase empathy or sympathy towards another person, animal, or even yourself, many other traits shine bright too – such as kindness, joy, community, etc. It is through the heart we navigate the world, and have these traits and in my writing I like to make this the core theme/concept.
உங்கள் எழுத்து செயல்முறை எப்படி இருக்கும்? நீங்கள் தட்டச்சு செய்கிறீர்களா அல்லது எழுதுகிறீர்களா? பல வரைவுகள், நீண்ட இடைநிறுத்தங்கள் அல்லது திடீர் செயல்பாட்டு வெடிப்புகள் உள்ளனவா?
What does your writing process look like? Do you type or write? Are there multiple drafts, long pauses, or sudden bursts of activity?
நான் எழுதுவதற்கு முன் பெரும்பாலும் முழு கதையையும் கற்பனை செய்து பின்னர் எழுத ஆரம்பிக்கின்றேன். இது பொதுவாக என்னை மிகவும் இறுக்கமான காலக்கெடுவில் வைக்கிறது, முழு கதையையும் கற்பனை செய்யாமல் என்னால் எழுத முடியாது. நான் இப்போது தட்டச்சு செய்யப் பழகிவிட்டேன், ஆனால் முன்பு எனது சிறுகதைகளை கையால் எழுதுவேன்.
நான் எழுதத் தொடங்குவதற்கு முன் கற்பனையில் நிறைய நேரத்தைச் செலவு செய்வதால் சில நாட்களில் கதைகளை எழுதி முடிக்கிறேன்.
My writing process is mostly spending time brainstorming and then starting to write. This usually ends up putting me in very tight deadlines, as if I can’t visualise the full story in my head I can’t start writing. I am now acclimatised to typing, but previously I’d handwrite my short stories.
After I’ve started writing, there is only on certain occasions, where I have multiple drafts since I’ve invested a lot of time into brainstorming. Once the story is fully visualised and formed – it’s a sudden burst of activity, where I am writing for hours on days end. So overall, I’d say my process is a lot of daydreaming and intense writing over short bursts.
உங்கள் வேலை செய்யும் இடம் எப்படி இருக்கும்?
What does your working space look like?
எனது கணினி இருக்கும் மேசையில் ஒரு நாட்காட்டி, எழுதும் குறிப்புக்கள் ஒரு தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்கள் மற்றும் சில அழகான சிறிய பொம்மைகளையும் வைத்திருக்கிறேன். நான் தட்டச்சு செய்வதில் பழகிவிட்டாலும் பழைய காலத்தை நினைவுபடுத்தும் வகையில் பென்சில் ஹோல்டரை என் மேசையில் வைத்திருக்கிறேன்.
My working space is quite maximalist in a sense. I have a calendar, my reading and writing spectacles, a Tamil dictionary, Tamil books, and some cute small figurines I’ve stolen from my daughter’s room to make it more lively. Though I’ve acclimatised to typing I still do have a pencil holder on my desk to reminisce of the old times.
தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் நூலிற்கு 30 வார்த்தைகள் அல்லது அதற்கும் குறைவான வார்த்தைகளில் ஒரு சுருக்கமான உரை உருவாக்கவும்.
Make an elevator pitch for your shortlisted work in 30 words or less.
முகிழ் 13 சிறுகதைகளைக் கொண்டுள்ளது, இது சிங்கப்பூரின் நல்லிணக்கம், மனிதநேயம் மற்றும் இரக்கத்தையும் கருப்பொருளாகக் கொண்டு இருக்கின்றன. நாம் நாளும்தோறும் கடந்து செல்லும் மனிதர்களைக் கதாபாத்திரங்களாகக் காணலாம்.
Mugizh has 13 curated short stories, set in Singapore, covering themes under harmony, humanity and compassion. It uncovers the magic in the day-to-day, drawing attention to what’s already before us.
இந்தப் படைப்பை எழுதும்போது ஒரு முக்கியமான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
Could you share a pivotal moment as you were writing this work?
கடந்த ஆண்டு, சீனப் புத்தாண்டின் போது, விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் செய்தித் தொகுப்புகளைப் பார்த்தேன். 60களில் நான் சிங்கப்பூரில் வளர்ந்தபோது எப்படி கொண்டாடப்பட்டது என்பதை ஒப்பிடுகையில், இது மிகவும் நவீனமயமாகத் தோன்றியது. சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களைக் காண்பிக்கும் ஒரு கதையை எழுத என்னைத் தூண்டியது வெவ்வேறு இனங்களின் பின்னணியில் உள்ள தனிநபர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட ஆழமான நட்பைப் பற்றிய அழகான கதையை எழுதினேன்.
நல்லிணக்கத்தையும் சமூக உணர்வையும் முன்னிலைப்படுத்தவும், சிங்கப்பூர் வரலாற்றை எனது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்பினேன். ’மாண்டரின் ஆரஞ்சு’ எனும் கதையை எழுதுவது எனக்கு முக்கியமானதாக இருந்தது. இது முகிழுடன் எனது பயணத்தைத் தொடங்கவும் உதவியது.
Last year, during Chinese New Year, I saw on the news clips of the festivities and celebrations. It looked more modernised, compared to how it was celebrated when I was growing up in Singapore during the 60s’. This inspired me to write a story showcasing Chinese New Year celebrations back then and include a beautiful story on a deep friendship shared between individuals from different races and backgrounds. It was important for me to write this story to highlight the harmony and sense of community I’ve known all my life and share a little bit of Singapore history with my readers, this then started my journey with Mugizh and is also the first short story (titled Mandarin Orange) in the book.
இந்தப் புத்தகத்தை எழுதும்போது உங்களுக்கு நீங்களே ஒரு அறிவுரை கூற விரும்பினால், அது என்னவாக இருக்கும்?
If you could give one advice to yourself when you were writing this book, what would it be?
எனது கதைகளை எழுதும்போது நேரத்தையும் எழுத்து வேலைகளையும் முறையாக ஒழுங்குப்படுத்தி இருந்தால் இன்னும் பல படைப்புகளைப் படைத்திருப்பேன். முகிழ் புத்தகத்தை எழுதுவதற்காக அதிக நேரம் பெற்றிருப்பேன் என்று நினைக்கிறேன்.
I’d tell myself to be more organized with my story drafts and categorization of stories. If I was more organized, I think I’d have been in a much better position and acquired more time to do all the other logistics of writing a book.